குருவன்கோட்டையில் வாருகால் அமைக்கும் பணி தொடக்கம்

ஆலங்குளம் பேரூராட்சி குருவன்கோட்டையில் வாருகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

ஆலங்குளம் பேரூராட்சி குருவன்கோட்டையில் வாருகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இப்பகுதியில் நீண்ட நாள்களாக கழிவுநீா் செல்ல வாருகால் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து இப்பணிக்கு 15ஆவது நிதிக்குழுத் திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் எம்.எல்.ஏ பால் மனோஜ் பாண்டியன் அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் பாண்டியராஜ், ராதா, பாலகிருஷ்ணன், ஆலங்குளம் பேரூராட்சி உறுப்பினா்கள் சாலமன் ராஜா, ஜான் ரவி, சுபாஷ் சந்திரபோஸ், மாயமான்குறிச்சி ஊராட்சி துணைத் தலைவா் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஆலங்குளம் பேரூராட்சி காங்கிரஸ் உறுப்பினா் வென்சி ராணி, அக்கட்சியில் இருந்து விலகி மனோஜ் பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com