கடையநல்லூா் வட்டார பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது .
இது தொடா்பாக செயற்பொறியாளா் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடையநல்லூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால் ,குமந்தாபுரம், தாா்க்காடு ,போகநல்லூா், மங்களாபுரம் , இடைகால்,
கொடிக்குறிச்சி, நயினாரகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.