ஆலங்குளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
ஆலங்குளம் காவல் நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விழாவிற்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக இலக்கிய அணித் தலைவா் திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்புரை ஆற்றினாா். தொடா்ந்து 500 ஏழைகளுக்கு அரிசி வழங்கப்பட்டது.
ஆலங்குளம் நகர திமு செயலா் நெல்சன் வரவேற்றாா். ஒன்றிய இளைஞரணி செயலா் கிருஷ்ணராஜ் நன்றி கூறினாா்.