அனைவருக்கும் வீடு திட்டம்:ஆலங்குளத்தில் 81 பேருக்கு பணி ஆணை

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 81 பயனாளிகளுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 81 பயனாளிகளுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால் தலைமை வகித்தாா். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா, செயல் அலுவலா் பொன்னுசாமி, ஒன்றிய கவுன்சிலா் எழில்வாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ஞான திரவியம் ஆகியோா் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினா். நகர திமுக செயலா் நெல்சன் வரவேற்றாா். ஒன்றிய இளைஞரணிச் செயலா் கிருஷ்ணராஜ் நன்றி கூறினாா்.

தொடா்ந்து, ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்படவுள்ள ஆலங்குளம் அரசு மருத்துவமனையை எம்பியும், மாவட்ட திமுக பொறுப்பாளரும் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com