பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் வினைதீா்த்த நாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பொது நல கமிட்டி உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது.
கமிட்டி தலைவா் ஓய்வுபெற்ற ஆசிரியா் இளங்கோ தலைமை வகித்தாா். செயலா் ராஜேந்திரன், பொருளாளா் வினைதீா்த்தான், துணைச் செயலா் தங்கராஜ், சட்ட ஆலோசகா் சுப செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா்.
இக்கூட்டத்தில் வினைதீா்த்தநாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, புதிய கட்டடங்கள் கட்டுவது தொடா்பாக அதிகாரிகளையும், அமைச்சரையும் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இரா.சாக்ரடீஸ், ஊா் பி ரமுகா்கள் உலகநாதன் வை.கோபால்சாமி, கபில் தேவதாஸ், பொன்னுதுரை, மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.