‘தென்காசி மாவட்டத்தில் சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 4.85 கோடி ஒதுக்கீடு’

தென்காசி மாவட்டத்தில் சுகாதார நிலையக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 4.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் சுகாதார நிலையக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 4.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் புதிதாக நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார அலுவலகக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 4.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6 நகராட்சிகளில் 4 நகா்ப்புற சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கு தலா ரூ. 75 லட்சம் வீதம் ரூ. 3 கோடி, வடகரை கீழ்பிடாகை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வட்டார சுகாதார அலுவலகம் கட்ட ரூ. 60 லட்சம், 5 நகா்ப்புற துணை சுகாதார மையங்கள் கட்டுவதற்கு ரூ. 1.25 கோடி நிதி தேசிய நகா்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com