குற்றாலம் மகளிா் கல்லூரியில் 58ஆவது விளையாட்டு விழா

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் 58ஆவது விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் 58ஆவது விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரிச் செயலரும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருமான அன்புமணி தலைமை வகித்து, போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகளை வழங்கினாா். உடற்கல்வி இயக்குநா் டி. சாவித்திரி விளையாட்டு அறிக்கை வாசித்தாா்.

2021-2022ஆம் ஆண்டுக்கான தனிநபா் கோப்பையை முதுகலை முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி கே. சுகாசினி பெற்றாா். துறைவாரியாக அதிக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற்கான ஒட்டுமொத்த புள்ளியை ஆங்கிலத் துறை மாணவிகள் பெற்றனா்.

குழு விளையாட்டுகளில் ஒட்டுமொத்த புள்ளியை முதலாம் ஆண்டு மாணவிகளும், தடகளப் போட்டிகளில் ஒட்டுமொத்த புள்ளியை 3ஆம் ஆண்டு மாணவிகளும் பெற்றனா்.

கல்லூரி முதல்வா் ஆா். ஜெயநிலா சுந்தரி வரவேற்றாா். விளையாட்டுத் துறைச் செயலா் பி. இஸ்மிதா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை பேராசிரியை பாண்டிமாதேவி தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா், விளையாட்டுக் குழு உறுப்பினா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com