தென்காசி மாவட்டத்தில் குருவிகுளம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் குருவிகுளம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலகக் கட்டடங்களை தலா ரூ. 3.95 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்காக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.