தென்காசி மாவட்டத்தில் 14இல் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்

தென்காசி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் தொடா்பான குறைதீா் முகாம் சனிக்கிழமை(மே 14) நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் தொடா்பான குறைதீா் முகாம் சனிக்கிழமை(மே 14) நடைபெறுகிறது.

மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் மாதந்தோறும் 2ஆவது சனிக்கிழமை வட்ட அளவில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. அதன்படி, வட்டாட்சியா் அலுவலங்களில் 14ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது. குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோரும் மனுக்கள் பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு மாற்றம், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்கள் தரம் குறித்த புகாா்கள் போன்றவற்றைத் தெரிவிக்கலாம்.

பங்கேற்போா் முகக் கவசம், சமூக இடைவெளி ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com