சுரண்டை: சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இத்திருக்கோயில் திருவிழா கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாள்களில் தினமும் இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு 10 மணிக்கு கோயில் கலையரங்கில் பல்சுவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9ஆம் திருநாளான புதன்கிழமை மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.
இதில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள் மற்றும் ஏழு சமுதாய மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.