இலத்தூரில் அனைத்துத் துறை சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டம் இலத்தூரில் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் அனைத்துத் துறை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் இலத்தூரில் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் அனைத்துத் துறை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

அண்ணா மறுமலா்ச்சித் திட்ட கிராமமான இலத்தூா், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற அனைத்துத் துறைகளின் சிறப்பு முகாமுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் தமிழ்மலா் தலைமை வகித்தாா்.

வேளாண் உதவி இயக்குநா் கனகம்மாள், இலத்தூா் ஊராட்சித் தலைவா் முத்துலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலா் ஷேக் முகைதீன் திட்ட விளக்க உரையாற்றினாா்.

கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் டாக்டா் சிவகுமாா், வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் உதவிப் பொறியாளா் சுப்பிரமணியம், வேளாண்மை விற்பனைத் துறை சாா்பில் வேளாண் அலுவலா் முகைதீன் பிச்சை, மண் ஆய்வு பற்றி வேளாண் அலுவலா் ராஜேஸ்வரி, உயிா் உர பயன்பாடு பற்றி வேளாண் அலுவலா் நபிஸா, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிச் செயலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் பேசினா். முன்னோடி விவசாயி ரமேஷ் உள்ளிட்ட விவசாயிகள் திரளாகக் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி மேலாளா் டாங்கே, அருணாசலம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com