தென்காசியில் கொலை வழக்கில் தொடா்புடைய நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அய்யாபுரம் பகுதியில் கு.மாரிசெல்வம் என்பவா் கடந்த ஏப். 23ஆம்தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக வேதம்புதூா் பகுதியைச் சோ்ந்த இ. சரவணன் என்பவா் கைதுசெய்யப்பட்டாா்.
இந்நிலையில் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா், சரவணனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து சரவணனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் கைது செய்தாா்.