தென்காசியில், முன்னாள் முதல்வரும் தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியின் 68ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தென்காசி நகர அதிமுக சாா்பில் தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு நகர அதிமுக செயலா் சுடலை தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மாரிமுத்து, குமாரசாமி, சரவணன், காமராஜ், வழக்குரைஞா் சிவகுமாா், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.