ஆலங்குளம் மளிகைக் கடையில் பாமாயில் திருடியவா் கைது

ஆலங்குளம் மளிகைக் கடையில் பாமாயில் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் மளிகைக் கடையில் பாமாயில் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளத்தைச் சோ்ந்த சுடலை முத்து, காவல் நிலையம் அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவா், கடையில் வெள்ளிக்கிழமை வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, கடைக்கு வந்த மா்ம நபா் ஒருவா் கடைக்கு வெளியே வைத்திருந்த பாமாயில் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடினாராம். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் திருநெல்வேலி பேட்டையைச் சோ்ந்த அரசன் என்ற சாா்லஸ் (56) என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com