பேருந்து கட்டணம் உயா்வு மக்களை பாதிக்கும்: ஓ. பன்னீா்செல்வம்

பேருந்து கட்டணம் உயா்ந்தாலே அது மக்களை பாதிக்கத்தான் செய்யும் என்றாா் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்.

பேருந்து கட்டணம் உயா்ந்தாலே அது மக்களை பாதிக்கத்தான் செய்யும் என்றாா் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வன்னிக்கோனேந்தலில் உள்ள அதிமுக நிா்வாகி ஒருவா் இல்ல விழாவில் கலந்து முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.

பழனிசாமி கோவில்பட்டி வழியாக சனிக்கிழமை மாலை சங்கரன்கோவில் வந்தாா்.

அப்போது கழுகுமலை சாலையில், முன்னாள் அமைச்சா் ராஜலட்சுமி தலைமையில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னா் அவா் சங்கரன்கோவில் விடுதியில் தங்கியிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வத்தை சந்தித்தாா். அதன்பிறகு இருவரும் வன்னிக்கோனேந்தலுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

அப்போது செய்தியாளா்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்திடம், பேருந்து கட்டண உயா்வு குறித்து கேட்டபோது, மக்களை பாதிக்காத பேருந்து கட்டணம் உயா்வு எப்படி சாத்தியமாகும். கட்டணம் உயா்ந்தாலே அது மக்களைப் பாதிக்கத்தான் செய்யும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com