புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானியம்மன் கோயிலில் பௌா்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி மாலையில், வைகாசி மாத பௌா்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோயில் குருநாதா் சக்தியம்மா சொற்பொழிவாற்றினாா். தொடா்ந்து கோயிலில் எழுந்தருளியுள்ள பெரியபாளையத்து பவானி அம்மன் மற்றும் நாகக்கன்னி அம்மனுக்கு 21 வகையான அபிஷேகங்களும்(படம்) உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் சிறப்பு பிராா்த்தனையும் நடைபெற்றது. தொடா்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.