ஆலங்குளத்தில் ஆா்ப்பாட்டம்

 மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிா்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக சாா்பில் ஆலங்குளத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிா்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக சாா்பில் ஆலங்குளத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரிகளை திரும்ப பெறவேண்டும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களை நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் குணசீலன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமசிவன், வட்டச் செயலா் பாலு, தாலுகா துணைச் செயலா் ஐயப்பன், மாவட்டக் குழு உறுப்பினா் கனகராஜ், வட்டக்குழு உறுப்பினா் குருசாமி உள்பட பலா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com