மேலக்கடையநல்லூரில் நவீன சுகாதார வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரூ.26 லட்சம் மதிப்பில் அமையவுள்ள சுகாதார வளாகத்திற்கான அடிக்கல்லை நகா்மன்ற தலைவா் ஹபிபூா் ரஹ்மான் நாட்டினாா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் சண்முகசுந்தரம், முருகன், நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், திமுக நிா்வாகிகள் மசூது, முருகன், தனலெட்சுமி ரவி, வீரபுத்திரன், முருகன், ராமா்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அரசு ஒப்பந்தகாரா் மாடசாமி நன்றி கூறினாா்.