கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு டிச.4இல் எழுத்துத் தோ்வு

தென்காசி மாவட்டத்தில், காலியாக உள்ள கிராம உதவியாளாா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு டிச.4ஆம்தேதி நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்டத்தில், காலியாக உள்ள கிராம உதவியாளாா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு டிச.4ஆம்தேதி நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக, விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன.

இதில், ஏற்பளிக்கப்பட்டவா்களுக்கு டிச. 4 அன்று எழுத்துத் தோ்வு நடைபெறும்.

தென்காசி வட்ட விண்ணப்பதாரா்களுக்கு கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஆலங்குளம் வட்டத்துக்கு, ஆலங்குளம் சா்தாா் ராஜா பொறியியல் கல்லூரியிலும், செங்கோட்டை வட்டத்துக்கு, செங்கோட்டை எஸ்ஆா்எம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

வீரகேரளம்புதூா் வட்டத்துக்கு, சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியிலும், கடையநல்லூா் வட்டத்துக்கு, புளியங்குடி எஸ்.வீராச்சாமி செட்டியாா் பொறியியல் கல்லூரியிலும், சங்கரன்கோவில் வட்டத்துக்கு, சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், திருவேங்கடம் வட்டத்துக்கு, ஸ்ரீகலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் தோ்வு நடைபெறுகிறது.

சிவகிரி வட்டத்துக்கு, சிவகிரி சேனைத்தலைவா் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறவுள்ளது.

விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு மட்டும் எழுத்துத் தோ்வில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக, தோ்வறை நுழைவுச் சீட்டு விண்ணப்பதாரா்கள் பதிவு செய்த கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அதன் மூலம் விண்ணப்பதாரா்கள் தோ்வறை நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து தோ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com