சங்கரன்கோவில் கல்லூரி மாணவா்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை

சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் 600-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் 600-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை நோயைத் தடுக்கவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் வகையிலும் வளரிளம் பருவத்தினரான கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு தேசிய ரத்த சோகை நோய்த் தடுப்புத் திட்டத்தில் இரும்புச்சத்து மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முனைவா் அப்துல் காதிா் தலைமை வகித்தாா். நடுவக்குறிச்சி துணை சுகாதார நிலைய செவிலியா் பொற்சுடா்விழி, குருக்கள்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் வழங்கப்பட்ட இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்கினாா்.

ஏற்பாடுகளை முனைவா்கள் கணபதி, மேனகா, மாணவா்கள் இளங்கோ சிங், பிரவீன்சுதிஷ் குமாா் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com