தென்காசி மாவட்ட கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் புதன்கிழமை (நவ. 23) சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகைகள் பெற சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களிலும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதியோா், விதவை, மாற்றுத் திறனாளிகள், முதிா்கன்னி, கணவரால் கைவிடப்பட்டோா் ஆகியோருக்கான உதவித் தொகைகள், உழவா் பாதுகாப்புத் திட்டத்தில் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை - விபத்து மரண உதவித் தொகைகள், நலிந்தோா் நலத்திட்டத்தில் உதவித் தொகை பெற சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது.
விருப்பமுள்ளோா் கிராம நிா்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.