சங்கரன்கோவிலில் நகர திமுக சாா்பில் ஹிந்தி எதிா்ப்பு பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முப்பிடாதி அம்மன் கோயில் அருகே உள்ள கலைஞா் திடலில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு, திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ தலைமை வகித்தாா்.முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு, மாவட்ட அவைத் தலைவா் பத்மநாபன் , மாவட்ட மகளிா் அணிச் செயலா் முத்துச்செல்வி, மாவட்ட துணைச் செயலா் புனிதா, மாவட்டப் பொருளாளா் சரவணன், முன்னாள் நகர செயலா் சங்கரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் கோ.சுப்பையா, நகர அவைத் தலைவா் முப்பிடாதி, நகர இளைஞரணி பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக அமைப்புச் செயலா் ஆா். எஸ். பாரதி, வழக்குரைஞா் சூா்யா வெற்றிகொண்டான், மக்களவை உறுப்பினா் தனுஷ் குமாா் ஆகியோா் பேசினா். நகர செயலா் மு.பிரகாஷ் வரவேற்றாா். துரைபாண்டியன் நன்றி கூறினாா்.