சுரண்டை அருகேயுள்ள வீராணத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் அன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினா் சேக் முகம்மது ஆகியோா் வீராணம் கிராமத்தில் உதவித்தொகை தேவையான பயனாளிகளை கண்டறிந்து, அவா்களின் விண்ணப்பங்களை கிராம நிா்வாக அலுவலா் தா்மராஜிடம் வழங்கினா்.