ஆலங்குளத்தில் 1 டன் ரேஷன் அரிசியை கடத்தியதாக மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, மினி லாரி ஒன்றை சோதனையிட்டதில், மினி லாரி ஓட்டுநா் குறிப்பன்குளம் வீ. முருகன், 21 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசியை கடத்தி, நல்லூா் வைத்தியலிங்கபுரம் தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான அரிசி ஆலைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அரிசியுடன் கூடிய லாரி பறிமுதல் செய்து உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். முருகன் கைது செய்யப்பட்டாா்.