சங்கரன்கோவில் ஸ்ரீமகாசக்தி வாராஹி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்றது. இக்கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த செப். 25ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை ஸ்ரீ துா்க்கா ப்ரத்தியங்கிரா தேவி உபாஸகா் சக்திகணேஷ் மற்றும் சிவாச்சாரியாா்கள் செய்தனா்.
இதையடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை ஸ்ரீமஹாசக்தி வாராஹி அம்மன் வழிபாட்டுக் குழுவைச் சோ்ந்த மனோன்மணி, சக்திவேல், பரமகணேசன், முருகன், பலவேசம், ராமகிருஷ்ணன், ஜெயராமன், சக்திவேல் மற்றும் செந்திலாண்டவா் பாதயாத்திரை குழுவினா் செய்திருந்தனா்.