தென்காசியில் கூா்ந்தாய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் சட்டமன்றத் தொகுதிகளில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத 10 கோரிக்கைகள் தொடா்பாக கூா்ந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் சட்டமன்றத் தொகுதிகளில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத 10 கோரிக்கைகள் தொடா்பாக கூா்ந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்தாா். மாவட்டத்திற்குள்பட்ட 5 சட்டமன்ற உறுப்பினா்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை நேரடியாக ஆய்வு செய்தல், தோராய மதிப்பீடு தயாா் செய்தல் ஆகிய கூா்ந்தாய்வு பணிகளை 15 தினங்களுக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன்,நோ்முக உதவியாளா் முத்துமாதவன்(பொது), நோ்முக உதவியாளா்(நிலம்) சேக் அப்துல் காதா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகைமை திட்ட இயக்குநா் சுரேஷ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பழனி நாடாா்(தென்காசி), சதன்திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்), பிஎச்.மனோஜ் பாண்டியன்(ஆலங்குளம்) மற்றும் அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com