தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டடத்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
புளியங்குடி பெரிய பள்ளிவாசல் அருகில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில்,தென்
காசி வருவாய் கோட்டாட்சியா் கங்காதேவி, வட்டாட்சியா் சண்முகம், புளியங்குடி டிஎஸ்பி அசோக், காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் அந்தக் கட்டடத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்தக் கட்டடம் மளிகைக் கடையாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருவது தெரிந்தது. இருப்பினும், அங்குள்ள கட்டடங்களில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.