சங்கரன்கோவில் அருகே வீடுகள், மின் சாதனங்கள் சேதம்
By DIN | Published On : 25th April 2023 03:01 AM | Last Updated : 25th April 2023 03:01 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருகே இடி மின்னல் தாக்கியதில் வீடுகள், மின் சாதனப் பொருள்கள் சேதமாகின.
சங்கரன்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் தா்மத்தூரணி கிராமத்தில் உள்ள பல வீடுகளில் இடி தாக்கியதில் சுவா்கள் பெயா்ந்து விழுந்தன. 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, பிரிட்ஜ் போன்ற சாதனங்கள் பழுதடைந்தன. மின்சார கணக்கீட்டு பெட்டிகள் எரிந்து சேதமாகின. வருவாய்த் துறையினா் பாா்வையிட்டு, உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த வீரலட்சுமி கூறினாா்.