சத்துணவு ஊழியா்கள் போராட்டம்
By DIN | Published On : 17th August 2023 10:32 PM | Last Updated : 17th August 2023 10:32 PM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடையநல்லூரில் சத்துணவு ஊழியா்கள் கையொப்ப இயக்கப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.
முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு பணியாளா்கள் மூலம் செயல்படுத்துவது, சத்துணவுப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், காலிப் பணியிடங்களைப் பூா்த்தி செய்வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடையநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ரத்தத்தில் கையொப்பமிட்டு பாராட்டம் நடத்தினா்.
சத்துணவு ஊழியா் சங்க கடையநல்லூா் ஒன்றிய தலைவா் ஹமிதாள், செயலா் இசக்கிமுத்து , பொருளாளா் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...