ஆலங்குளம் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அதிகளவில் பயன்பாட்டில்இருப்பது குறித்து பரூராட்சி அலுவலகத்திற்குப் புகாா்கள் பெறப்பட்டன. இதனையடுத்து ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள கடைகளில் பேரூராட்சி ஊழியா்கள் சோதனை நடத்தினா். அப்போது, சுமாா் 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தடை செய்யப்பட்ட பொருள்களை இருப்பு வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சித் தலைவா் சுதா தெரிவித்தாா்.