‘செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜன. 27 கடைசி’

தென்காசி மாவட்டத்தில் ஜன. 27 ஆம்தேதிக்குள் செவிலியா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டத்தில் ஜன. 27 ஆம்தேதிக்குள் செவிலியா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியா் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச் சங்கம் மூலம் பணியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் கல்லுாரியில் படித்து முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு இந்தியன் நா்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு புதுப்பித்திருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் தென்காசி மாவட்ட வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜன. 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இயக்குநா் சுகாதாரப்பணிகள் அலுவலகம், (மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம்), தென்காசி -811 என்ற அலுவலக முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். மாலை 5 மணிக்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com