ஜன.26இல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்
By DIN | Published On : 24th January 2023 01:02 AM | Last Updated : 24th January 2023 01:02 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 26இல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26ஆம் தேதி பகல்11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் உள்பட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.