பாவூா்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி டி.டி.டி.ஏ. பள்ளியில் ஆதாா் சிறப்பு முகாம் செவ்வாய்கிழமை (ஜன.24) நடைபெறுகிறது.
ஆதாரில் பெயா், முகவரி, கைப்பேசி எண் திருத்தம், குழந்தைகளுக்கு புதிய ஆதாா் எடுத்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும். இந்த முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு பாவூா்சத்திரம் துணை அஞ்சலக அதிகாரி ஜெயக்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.