தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்காக வட்டார அளவில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தவுள்ளன.
முகாம் நடைபெறும் தேதி, இடங்கள்: ஜன. 25-ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, 27-கீழப்பாவூா் டிபிஎஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 30-செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பிப். 3-கடையம் சத்திரம் மேல்நிலைப் பள்ளி, 6- கடையநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 8- புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 10- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 13-குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி, 15- சோ்ந்தமரம் அரசு மேல்நிலைப் பள்ளி.
அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விரும்பும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், 5 புகைப்படங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதோா் இம்முகாமில் பெறலாம் என்றாா் அவா்.