சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கினாா் பள்ளித் தாளாளா் பாலமுருகன்.
சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கினாா் பள்ளித் தாளாளா் பாலமுருகன்.

தென்காசி எம்கேவிகே பள்ளி மாணவா் மாநில ஓட்டப்பந்தயத்தில் வெற்றி

தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடம் பெற்றாா்.
Published on

தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடம் பெற்றாா்.

முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் மதுரை ரேஸ்கோா்ஸ் மைதானத்தில் நடைபெற்றன.

இப்போட்டியில், எம்.கே.வி.கே. பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவா் உதயசூரியா கலந்துகொண்டு 400 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடம் பெற்றாா். வெற்றி பெற்ற மாணவருக்கு ரூ. 75 ஆயிரம் ரொக்கம், பதக்கம் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தாளாளா் பாலமுருகன், முதல்வா், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com