குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞர் கைது

பாளையங்கோட்டை அருகேயுள்ள கக்கன்நகரைச் சேர்ந்த இளைஞர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார்.
Updated on
1 min read

பாளையங்கோட்டை அருகேயுள்ள கக்கன்நகரைச் சேர்ந்த இளைஞர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார்.
கக்கன்நகரில் உள்ள பாண்டியன் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் கணேசன் (38). இவர், கடந்த மே 29ஆம் தேதி திருநெல்வேலி-தூத்துக்குடி சாலையில் அரியகுளம் சந்திப்பு அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்தி செல்ல முயன்றாராம். அவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் திருப்பதி கைது செய்தார்.
கணேசன் மீது ஏற்கெனவே அரிசிக் கடத்தல் வழக்குகள் உள்ளனவாம். இதனால் அவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் கணேசன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com