பாளை.யில் இலக்கிய சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் 390 ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

நெல்லை கம்பன் கழகத்தின் 390 ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கம்பன் கழகத் தலைவர் செமைநதிராசா தலைமை வகித்தார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா இறைவணக்கம் பாடினார். பே.சங்கரபாண்டியன் வரவேற்றார். அருங்குணத்து அண்ணல் அனுமன் என்ற தலைப்பில் ந.ராசாமணியும், கும்பகர்ண நீதி என்ற தலைப்பில் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர்.
நிகழ்ச்சியில் கு.ராசாமணி, பிரபு, கோபாலன், சங்கரன், துளசிராமன், குருசாமி, ஆதிமூலம், பெருமாள், ராமகிருஷ்ணன், அருணாசலம், மாரியப்பன், பிள்ளைசூரியன், தங்கராஜ், சக்திவேல், தங்கம் இளங்கோவன், மீனாகுமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.  செயலர் கவிஞர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com