திருநெல்வேலி மாநகராட்சி எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் நலச்சங்கம் சார்பில் திருநெல்வேலி நகரத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் மாநகராட்சி பொறியாளர் பைஜுவைத் தாக்கியவர்களை கைதுசெய்ய வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு பட்டன் தலைமை வகித்தார். எஸ்.சுந்தரம் வரவேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் பூ.கோபாலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சங்க ஆலோசகர்கள் பி.பொன்னுச்சாமி, ஜெயசங்கரன் உள்பட பலர் பேசினர். எஸ்.சுடலைக்கண்ணு நிறைவரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் செல்வரத்தினம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.