கண்டியப்பேரி அருகே விபத்து: காயமடைந்த இளைஞர் சாவு

திருநெல்வேலி கண்டியப்பேரி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

திருநெல்வேலி கண்டியப்பேரி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை என்.கே.பி. நகரில் உள்ள இசக்கியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கப்பன் மகன் சக்திவேல் (18). இவர், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக பணியாளராக எலக்ட்ரீஷன் பணி செய்து வந்தார். கடந்த 12 ஆம் தேதி தனது நண்பருடன், சக்திவேல் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். கண்டியப்பேரி அருகே மோட்டார்சைக்கிளும், லாரியும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com