பெருமாள்புரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கநகையைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பெருமாள்புரம் அருகேயுள்ள நம்பிக்கை நகரைச் சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாள் (35). இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், மாரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.