தாழையூத்தில் விபத்து: துப்புரவுப் பணியாளர் சாவு

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் துப்புரவுப் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Updated on
1 min read

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் துப்புரவுப் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வடக்குதாழையூத்து அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சப்பாணி மகன் மாடசாமி (54). திருநெல்வேலி மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தார். இவர், தனது மோட்டார் சைக்கிளில் பண்டாரகுளம் சலையில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது காரும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com