பாளையங்கோட்டை திருமால்நகர் வள்ளலார் தமிழ் மன்றத்தின் 5 ஆவது ஆண்டு தொடக்க விழா, என்ஜிஓ- ஏ காலனியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, அமைப்பின் தலைவர் த. பிச்சையா தலைமை வகித்தார். தமிழ்வளர்ச்சி பண்பாட்டு மையத் துணைத் தலைவர் தி.த. ரமேஷ்ராஜா, தொழிலதிபர்கள் பி. கோவிந்தன் என்ற கோபி, கு. விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், பெரியபுராணம் காட்டும் தமிழர் வாழ்வியல் எனும் தலைப்பில் சு. கோமதி சங்கர், அறிவியலும் அவசர உலகமும் எனும் தலைப்பில் ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி மாணவி ந. ஸ்வேதா, தமிழரின் கட்டடக் கலை எனும் தலைப்பில் சாரதா மகளிர் கல்லூரி மாணவி தா. மரகதம் ஆகியோர் பேசினர்.
நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் பி. உலகம்மாள், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் செ. ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிலா இலக்கிய வட்டச் செயலர் ந. ராஜகோபால், எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், கம்பன் இலக்கிய சங்க இணைச்செயலர் இரா. முருகன், அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் துணை இயக்குநர் கு.க. நமச்சிவாயம், அப்துல்கலாம் தமிழ் மன்றச் செயலர் முத்து குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வே. விஜயா வரவேற்றார். கவிஞர் யோகி என்ற உத்தாண்டன் நன்றி கூறினார்.