நெல்லை மாவட்டத்தில் நிரம்பி வழியும் 6 அணைகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி ஆகிய 6 அணைகளும் நிரம்பியதையடுத்து, இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளுக்கு வந்து கொண்டிருந்த உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், அடவிநயினார், குண்டாறு, கருப்பாநதி அணைகளில் இருந்தும் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com