திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதம் நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டம் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு மாதமும் 3ஆவது வாரத்தில் (வெள்ளிக்கிழமை) மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். அதன்படி, இந்த மாதம் நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே, இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.