நெல்லை கம்பன் கழகத்தின் 488ஆவது தொடர் சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் 488ஆவது தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

நெல்லை கம்பன் கழகத்தின் 488ஆவது தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியர் ஐயப்பன் தலைமை வகித்தார். முருகேசன் இறைவணக்கம் பாடினார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றார். "சொல்லின் செல்வனும் கற்பினுக்கு அணியும்' என்ற தலைப்பில் நெல்லை காவியனும், "யுத்த காண்டம்' என்ற தலைப்பில் கழகச் செயலர் பொன்.வேலுமயிலும் சொற்பொழிவாற்றினர். முனைவர் பாண்டியன், பேராசிரியர் போசு, முத்துராமலிங்கம், பேச்சிமுத்து, சேதுமாதவன், சந்திரமோகன், வெங்கடாசலபதி, பேராச்சிமுத்து, வள்ளி, உசா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com