ராதாபுரம், நான்குனேரி பகுதியில் பலத்த மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குனேரி, ராதாபுரம், மணிமுத்தாறு, பாபநாசம் அணைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குனேரி, ராதாபுரம், மணிமுத்தாறு, பாபநாசம் அணைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாகவும் மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 
வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, நான்குனேரி, ராதாபுரம், மணித்தாறு பகுதியில் பலத்த மழை பெய்தது.
மாலை 4 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு: பாபநாசம் அணை-15 மி.மீ., பாபநாசம் கீழ் அணை-3 மி.மீ., சேர்வலாறு அணை-2 மி.மீ., மணிமுத்தாறு அணை-15.6 மி.மீ., நம்பியாறு அணை-5 மி.மீ., நான்குனேரி-15 மி.மீ., ராதாபுரம்-22.2 மி.மீ., சேரன்மகாதேவி-6.4 மி.மீ., கன்னடியன் அணைக்கட்டு-2.6 மி.மீ., பாளையங்கோட்டை-3 மி.மீ., அம்பாசமுத்திரம்-2 மி.மீ.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 800 கனஅடி நீர்வரத்து இருந்தது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 400 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 256 கனஅடி, கடனாநதி அணைக்கு 70 கனஅடி, ராமநதி அணைக்கு 30 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணைக்கு 105 கனஅடி, கருப்பாநதி, கொடுமுடியாறு அணைகளுக்கு தலா 5 கனஅடி, குண்டாறு, நம்பியாறு அணைகளுக்கு தலா 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணை 119.75 அடி, சேர்வலாறு அணை 132.45 அடி, மணிமுத்தாறு அணை 96.75 அடி, கடனாநதி அணை 74.50 அடி, ராமநதி அணை 69.25 அடி, கருப்பாநதி அணை 68.45 அடி, குண்டாறு அணை 36.10 அடி, அடவிநயினார் அணை 106.00 அடி,  வடக்குப் பச்சையாறு அணை 27 அடி, நம்பியாறு அணை 22.63 அடி, கொடுமுடியாறு அணை 41 அடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com