திருநெல்வேலி
மேலப்பாளையத்தில் மக்கள் மறியல் முயற்சி
மேலப்பாளையத்தில் முழுமையாக சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சனிக்கிழமை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலப்பாளையத்தில் முழுமையாக சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சனிக்கிழமை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலப்பாளையத்தில் 37ஆவது வார்டுக்குள்பட்ட காஜா நாயகம் தெருவில், ரூ. 10 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த தெருவில் முழுமையாக சாலை அமைக்க வில்லை என புகார் எழுந்துள்ளது.
பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்ட இந்த தெருவில் முழுமையாக சாலை அமைக்க வேண்டும் என, காஜா நாயகம் ஒருங்கிணைந்த ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் பொதுமக்கள் அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களிடம் முறையிட்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது, காஜா நாயகம் தெருவில் முழுமையாக சாலை அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.