வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் அதிமுகவினர் கலந்துகொண்டு புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் தச்சை ந. கணேசராஜா வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் செப். 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளுதல், புதிய வாக்காளர் சேர்க்கும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (அக்.14) காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் அதிமுகவினர் கலந்துகொண்டு 1.1.2019 அன்று 18 வயதை பூர்த்தி செய்யும் அனைவரையும் புதிய வாக்காளர்களாக சேர்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.