அம்பாசமுத்திரம் அருகே   இளைஞர் வெட்டிக்கொலை

ஆம்பூர் அருகே   இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.   

ஆம்பூர் அருகே   இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.   
கீழ ஆம்பூர் அருகே காக்கநல்லூரைச் சேர்ந்த  ஒரு பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த   சின்னக்கருப்பன்  மகன் முருகன் காதலிலித்து வந்தாராம். இதற்கு  அந்தப் பெண்ணின் சகோதரர் மகேஷ் எதிர்ப்புத் தெரிவித்தாராம்.  ஆனால் இருவரும்  காதலை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த மகேஷ்,  தனது நண்பர்களான காக்கநல்லூரைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் முப்புலி,  இசக்கி மகன் கர்ணன் ஆகியோருடன்  சேர்ந்து  வெள்ளிக்கிழமை மாலை  முருகனின் அண்ணன் குமாரை (25) வெட்டியதில்  அவர் உயிரிழந்தார். 
இதுகுறித்து தகவலறிந்ததும் அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜாஹீர் ஹூசைன், காவல் ஆய்வாளர்கள் பிரதாபன், ஆதிலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து குமார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். 
இந்நிலையில் குமாரின் உறவினர்கள் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.   இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து, மகேஷ்,  முப்புலிலி , கர்ணன் ஆகியோரைத்  தேடிவருகின்றனர்.  அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com