சாலை விபத்தில் முதியவர் சாவு

திருநெல்வேலியில் வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

திருநெல்வேலியில் வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
திருநெல்வேலி அருகே புதுப்பேட்டை சத்யாநகரைச் சேர்ந்தவர் தாஸ்பாண்டியன் (61). கூலித் தொழிலாளி. இவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கணபதி மகன் மாரி பாண்டியனுடன் (22) பைக்கில் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தாராம். பின்னர்,  பைக்கில் ஊருக்கு திரும்புகையில், சந்திப்பு மேம்பாலத்தில் சென்றபோது,  அவ்வழியாக வந்த வாகனம் பைக் மீது மோதியதாம்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தாஸ்பாண்டியன், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். மாரிபாண்டியனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com